

கொந்தளிக்கும் கடலுக்குள்
நின்று கொண்டும் நனையாமல்
நான்.
பாலைவனத்தில் புரண்டு கொண்டும்
மீசைதனில் மண்ணில்லாமல்
நான்.
இருளினுள் துழாவிக் கொண்டும்
வெளிச்சப் பிரபஞ்சமாய்
நான்.
காற்றில் தவழ்ந்து கொண்டும்
புயலுக்குள் தென்றலாய்
நான்.
காமத்தில் விளையும்
காதலில் சிக்கிக் கொள்ளவில்லை
நான்.
பாசத்தின் பாவனைகட்குள்
பக்குவப்பட்டுப் போகவில்லை
நான்.
போலிகளின் போதனைக்குள்
மெய்யைத் தேடும் மாயையாய்
நான்.
இழிவாய்ச் சிரிக்கிறது...
எனைப் பார்த்து என் பிம்பமும்.
இருப்பினும்
நான் நானாகவே.!!
-த.பிரபு குமரன்
No comments:
Post a Comment