Monday, February 18, 2008

உன் மீதான பேரன்பு











"வேண்டாமென்று
வெட்டி விட்டாய் நீ.
உன் மடியில்
சந்தோஷமாக‌ மடிந்தன..
என் விரல் நகங்கள்..!"

"அடுத்து உன்னை
சந்திக்கும்வ‌ரை
என் விர‌ல்க‌ளுக்கு
சொடுக்கெடுக்காம‌ல்
வைத்திருப்பேன்..!"

"ஒரு ம‌ழை நாளில்
குடை சாய்த்து..
தூற‌லில் ந‌னைந்து சிலிர்த்தாய்.
குடை சாய்ந்த‌து ம‌ன‌து.!"

"அடிக்க‌டி
க‌ன‌வுக‌ளில் வ‌ருவாய்.
ஆனால் எப்போதாவ‌துதான்
பேசுவாய். அதுவும்....
'உன்னை ரொம்ப‌ பிடிச்சிருக்குடா'
என்பாய்..!"


"இர‌வில்
ப‌ணிம‌னைக்குத் திரும்பும்
காலிப்பேருந்துக‌ளைப் போலிருக்கிற‌து
நீயில்லாத‌ த‌னிமை..!"


"இதுதான் கார‌ண‌ம்
என்றில்லை..
நாம் அடிக்க‌டி
ச‌ண்டையிட்டுக் கொள்ள‌.
முத்த‌மிட்டுக் கொள்வ‌தும்
அது போல‌த்தான்..!"


"என் காதலை உனக்கு
அனுப்பி வைத்து விட்டு
உன் இதயப் பக்கங்களில்
நீ
பிரசுரிக்கும் நாளுக்காகக்
காத்திருக்கிறேன்.!"

"உன்னோடு
பழகிய பின்புதான்
தெரிந்து கொண்டேன்.
இரவு எத்தனை நீளமானது..!!!!"

"நீ
என் அருகில்
இல்லாத போதுதான்
நான் உன்னோடு
பேசுவது அதிகம்..!"

-த.பிரபு குமரன்

No comments: