
"பலூன் வேண்டுமென்று
கேட்டழுத குழந்தை,
வாங்கிக் கொண்டது...
அடிகளை.
பலூன் விற்கும் அப்பாவிடமிருந்து...!"
"வெடித்து விடுமோ என்ற
பயத்திலேயே
பெரிதாக்கியதில்லை
பெரும்பாலான
பலூன்களையும்,
பிரச்சனைகளையும்...!"
"பொம்மை, பலூன் என்று
வாசலில் புள்ளியின்றிக்
கோலமிடும் சிறுமிகள்....
ஒரு ஞாயிறு காலை.!"
"திருவிழா முடிந்த இரவு.
ஆளில்லாத சாலையில்
காற்றில்லாத மிதிவண்டியை
விரைந்து உருட்டுகிறான்
பலூன்காரன்.
காற்றடைத்து விற்காமல்போன
சில பலூன்களுடன்....!"
-த.பிரபு குமரன்
No comments:
Post a Comment