
காரணமற்று நீளும் இரவுகள்.
சலனமற்று உறங்கும் பகல்கள்.
விடியலில் மறைந்தும் மறையாமலும்
அந்தியில் உதித்தும் உதிக்காமலும்
விளையாடும் எனக்கான சூரியன்......
என்னைப் புரிதலுக்கான விடைகளோடு
என் பிரபஞ்சப் பால்வெளியில்
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களுக்குள்
ஒளிந்து கொண்டு புன்னகைகிறது
யாருக்கும் புலப்படாமல்.
ஏன்...எனக்கே புலப்படாமல்.!!
-த.பிரபு குமரன்
No comments:
Post a Comment